states

img

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம்: நாளை தீர்ப்பு

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற சிறப்புக் குழுவின் பரிந்துரை மனுமீது உச்சநீதிமன்றம் நாளை (ஏப்.18) தீர்ப்பு வழங்கவுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்.3-ஆம் தேதி ஒன்றிய பாஜக  அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்ததையடுத்து இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக உத்திரப்பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதில், ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த லக்னெள நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்.2-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், லக்கிம்பூர் கெரி சம்பவத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புக் குழு ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய பரிந்துரைத்தது. இந்த மனுவின் மீத உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.